Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: நவ. 01 – தமிழ்நாடு நாள் | மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி | சீமான் | பெ.மணியரசன்

Contact us to Add Your Business

திட்டமிட்ட, பாதுகாப்பான பயணம் மேற்கொள்வீர்..!

என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நாளை நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள்’ அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தரவிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க பெரும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றேன்.

உறுதியாக திட்டமிட்டபடி நடைபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பெருநிகழ்வில் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வருகை தரும் பேரன்பிற்குரிய உறவுகளும், தம்பி-தங்கைகளும் பயணத்தை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரங்கள் வாகனங்களில் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, நிதானமாக வாகனங்களில் பயணித்து வரவேண்டுமெனவும், அதற்கேற்றவாறு பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்க வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன். பயணத்தின் பொழுது நம்மால் மக்களுக்கு எந்த இடைஞ்சல்களும் ஏற்படாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும் கண்டிப்புடன் அறிவுறுத்துகிறேன். தலைக்கவசம், இடவாறு அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வருகை தந்து, பேரணியில் பங்கேற்றுவிட்டு, பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்ற செய்தியை அறிந்த பிறகுதான் என் மனம் நிம்மதி அடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நம்முயிர்த் தமிழ்க்காக்க நாம் அனைவரும் உணர்வெழுச்சியோடு ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இப்பெருமைமிகு பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை அன்பு உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ் மீட்சியே! தமிழர் எழுச்சி!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
மற்றவை நேரில்…

உங்கள் அண்ணன்
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

23 comments

  1. bilora sathyanathan

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி ?

  2. Chandra Kumar

    நாம் தமிழர் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
    தமிழால் ஒன்றாவோம்
    செயலால் வென்றாவோம்
    நாளை நமதே, ?நாடும் நமதே
    சொர்க்க பூமியாய் மாற்றியமைப்போம்

  3. Aasai thambi Jaahir

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஜாகிர் உசேன் என்கிற முருகா தமிழ் தேசியம் நாம் தமிழர் நாமே தமிழர்

  4. Gandhi Madhan

    தமிழர்களுக்கு கான ஊடாகம் வேண்டும் ஏனெனில் எல்லா ஊடாகம் தமிழர்கள் அல்லாதவர்கள் இருப்பதால் தமிழை புறக்கணிக்க நினைக்கிறார்கள்

    1. Manokar

      ஊடகங்கள் காசுக்காகதான், ஏன் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவில்லை அப்போ இந்த ஊடகங்கள் ஒரு நாள் காணாமல் போகும் தமிழ் நாட்டில் ஒரே சேனல் நாம் தமிழர் தான் இருக்கும், ஏயா ஆகாவளி ஊடகங்களே நயன் தாரா கர்ப்பம், ரம்பா கார் விபத்து, செருப்பு விளம்பரத்தை தலைப்பு செய்தியில் காட்டும் மானங்கெட்ட ஊடகங்கள் இதெல்லாம் காட்ட மறுப்பது வெட்கக்கேடானா ஊடகங்கள்

  5. Jai Ganesh

    மது குடிக்கிறான். மதி”மயங்குகிறான். உழைப்பை விட்டு வெளியேறுகிறான். மதுவை ஒழித்தால் உழைப்பை மீட்டெடுக்கலாம் அண்ணா

  6. ks nathan

    அண்ணன் அவர்கள் உணர்வு பெருக்குடன் கையை உயர்த்தி காட்டும் பொழுது நமக்குள்புது ரத்தம் பாய்கிறது.

Leave a Comment

Your email address will not be published.

*
*